சிங்கப்பூரின் குடியேற்றம், கவனமாகவே கையாளப்படுகிறது: பிரதமர் லீ
அங் கோ கியோ குழுத்தொகுதி, செங்காங் வெஸ்ட் (Sengkang West) தனித்-தொகுதியைச் சேர்ந்த 150 பேர் இன்று சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுக்கொண்டனர்.
அங் மோ கியோ குழுத்தொகுதி, செங்காங் வெஸ்ட் (Sengkang West) தனித்-தொகுதியைச் சேர்ந்த 150 பேர் இன்று சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுக்கொண்டனர்.
டவுன்ஸ்வில் (Townsville) தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியென் லூங் அவர்களுக்குக் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கினார்.
இது, புதிய குடிமக்களுக்கு மட்டும் முக்கியமான நாளல்ல...
இன்று, சிங்கப்பூர் மக்கள்தொகையும் அதிகரிக்கிறது என்பதைத் திரு. லீ சுட்டினார். ஆண்டுதோறும் 30,000 குழந்தைகள் சிங்கப்பூரர்களாகப் பிறக்கின்றன. ஆண்டுதோறும் 20,000 பேர் புதிதாக சிங்கப்பூர் குடியுரிமை பெறுகின்றனர்.
ஆக மொத்தம், சிங்கப்பூரில் ஆண்டுதோறும் புதிய குடிமக்களின் எண்ணிக்கை, 50,000. அதன் காரணமாக, சிங்கப்பூரின் மக்கள்தொகை நிலையான விகிதத்தில் நிலைத்திருக்கலாம் என்றார் பிரதமர் லீ.
சிங்கப்பூரின் குடியேற்றம், கவனமாகவே கையாளப்படுவதாக அவர் சொன்னார்.புதிய குடியேறிகள் இங்குள்ள சமூகத்துடன் இணைந்து செயல்படுவதையும், நமது பொருளியலுக்குப் பங்களிப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் நல்ல சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் என்பது ஒரு நாடு. அது வெறும் ஒரு நகரமோ, பொருளியலோ அல்ல என்பதைப் பிரதமர் லீ சுட்டினார்.