Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒன் நார்த் வட்டாரத்தில் விரைவில் தனிநபர் நடமாட்டச் சாதனப் பகிர்வுச் சேவைகள்

தனிநபர் நடமாட்டச் சாதனப் பகிர்வுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் பல்வேறு சாதனங்களை ஒன் நார்த் வட்டாரத்தில் விரைவில் சோதனையிடலாம். 

வாசிப்புநேரம் -

தனிநபர் நடமாட்டச் சாதனப் பகிர்வுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் பல்வேறு சாதனங்களை ஒன் நார்த் வட்டாரத்தில் விரைவில் சோதனையிடலாம்.

JTC நிறுவனம் அதற்கான தளத்தை வழங்கவுள்ளது.
ஒன் நார்த்தில் பணிபுரிவோர், தனிநபர் நடமாட்டச் சாதனங்களை உபயோகிக்கவும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பது அதன் நோக்கம் என்றது JTC.

காலை வேளைகளிலும் உச்ச நேரங்களிலும் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பகிர்வுச் சேவைகளை வழங்க அந்நிறுவனங்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படும் வட்டாரங்களில் இருந்து அதிகமாகத் தேவைப்படும் பகுதிகளுக்கு அவற்றைக் கொண்டு செல்வது அதில் அடங்கும்.

அத்தகைய பகிர்வுச் சாதனங்களை ஒழுங்காக நிறுத்திவைப்பதற்கான இடங்களும் ஒதுக்கப்படும்.

ஒன் நார்த்தில் தற்போது 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

16 பொது ஆய்வு நிலையங்கள் உள்ளன. சுமார் 46,000 பேர் அந்த வட்டாரத்துக்குப் போய்வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்