143 பல்கலை மாணவர்களின் விவரங்கள் 2016-இல் ஊடுருவல்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், புதிய மாணவர்களுக்கான அறிமுக நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள், தகவல் பாதுகாப்பின் தொடர்பில் பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், புதிய மாணவர்களுக்கான அறிமுக நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள், தகவல் பாதுகாப்பின் தொடர்பில் பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.
கடந்த ஆண்டு, அத்தகைய முகாமில் ஈடுபட்டிருந்த 143 மாணவத் தொண்டூழியர்களின் விவரங்கள் கொண்ட ஆவணம் பொதுமக்களின் பார்வைக்கு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
அந்த ஆவணத்தில் மாணவர்களின் முழு பெயர், கைபேசி எண்கள் போன்றவை பதிவுசெய்யப்பட்டிருந்தன.
தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கை அது என உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சம்பவம் குறித்த விசாரணைக்குப் பிறகு அண்மைய அறிவிப்பு வந்துள்ளது.
அத்தகைய அத்துமீறல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று பல்கலை வலியுறுத்தியது.