"நிலம் என்பது எப்போதுமே மதிப்புமிக்க ஒரு வளம்"
நிலம் என்பது எப்போதுமே மதிப்புமிக்க ஒரு வளம்.
நிலம் என்பது எப்போதுமே மதிப்புமிக்க ஒரு வளம்.
ஆனால் அதை மிக எச்சரிக்கையுடன் நிர்வகிக்க வேண்டும்.
தெற்காசிய ஆய்வுக் கழகம் இன்று நடத்திய கருத்தரங்கில் நிதியமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ஒரு நாடு தனது நிலவளத்தை எவ்வளவு கவனமாக நிர்வகிக்க வேண்டுமென்பதற்கு சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றார், திரு ஹெங்.
தெற்காசிய நாடுகளில் நிலவும் நிலம் கையகப்படுத்தல் பிரச்சினை, அது சார்ந்த அரசியல் பொருளியல் சவால்கள் ஆகியவை பத்தாவது ஆண்டாக நடந்துவரும் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகின்றன.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பைஜயந்த் பண்டா உள்ளிட்ட சுமார் 250 பேராளர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
இன்றும், நாளையும் நடைபெறும் அதில் அலசப்படும் முக்கியமான அம்சம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் தொடர்பில் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி எதிர்நோக்கும் சவால்கள்.