Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜொகூர் பாரு: கார் விபத்தினால் சிங்கப்பூரர் ஆடவர் மரணம்

ஜொகூர் பாருவில் நடந்த கார் விபத்தினால் பலத்த காயமடைந்த 24 வயது சிங்கப்பூர ஆடவர் மரணம் அடைந்தார்.

வாசிப்புநேரம் -

ஜொகூர் பாருவில் நடந்த கார் விபத்தினால் பலத்த காயமடைந்த 24 வயது சிங்கப்பூர ஆடவர் மரணம் அடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், KSL கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ஜாலான் டத்தோ அப்துல்லா என்ற சாலையில் அந்த விபத்து நடந்தது.

மாண்ட ஆடவர் ஜஸ்டினியன் டான், காரில் தமது நண்பர்கள் ஐவருடன் இருந்தார். அந்தக் காரை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று இடித்தது.

விபத்தில் ஜஸ்டினியன் நண்பர் 24 வயது பிரேண்டன் யோ காயமடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்ததாய் ஜஸ்டினியன் நண்பர்கள் கூறினர்.

மருத்துவ உதவி வாகனம் அங்கு செல்வதற்கு கிட்டதட்ட அரை மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜஸ்டினியன் கொண்டுசெல்லப்பட்ட Sultanah Aminah மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான வசதியும் இல்லை. பிறகு அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்