தீவு விரைவுச் சாலையில் 8 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து - மூவருக்குக் காயம்
விபத்தினால் மத்திய விரைவுச்சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் அது நீடித்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் குறிப்பிட்டது.
தீவு விரைவுச் சாலையில் இன்று மதியம் நடந்த விபத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடோன்று மோதிக் கொண்டதில் மூவருக்குக் காயம் ஏற்பட்டது.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வழியில் விபத்து நேர்ந்தது.
சுமார் 3.20 மணியளவில் விபத்துக் குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால் மத்திய விரைவுச்சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரம் அது நீடித்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் குறிப்பிட்டது.