2-மாத சிசுவுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்
வேலைக்கும் புதிதாய்ப் பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதற்கும் இடையில் திண்டாடித் தவித்த தாயார், அந்தக் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.
சிங்கப்பூர்: வேலைக்கும் புதிதாய்ப் பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதற்கும் இடையில் திண்டாடித் தவித்த தாயார், அந்தக் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.
புக்கிட் பாஞ்சாங் அடுக்குமாடிக் கட்டடத்தின் 12 ஆவது மாடியிலிருந்து குதித்த இருவரும் சம்பவ இடத்திலே மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 வயது திருவாட்டி கோ சுவான் பிங், தாம் தற்கொலை செய்துகொள்வதற்கு 5 நாட்களுக்கு முன்னர், "வேறு வழியில்லை என்றால் என்னதான் செய்வது?" என்ற வாக்கியத்தைக் கூகுள் தேடுதளத்தில் தட்டித் தேடியதாகத் தெரிய வந்தது.
தனது குழந்தைக்குப் போதிய தாய்ப்பாலை வழங்க இயலாதது..
புதிய பணிப்பெண்ணை அவசரமாகத் தேடுவதில் தாமதம்...
வேலை செய்யும் நிறுவனத்தில் நிலைமை சீராக இல்லாதது...ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர் மன உளைச்சல் கொண்டிருந்ததாக, திருவாட்டி. கோவுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.