ஆஷ்ரம் இடைவழி இல்லத்திற்கு வருகைபுரிந்தார் அதிபர் ஹலிமா
இந்து அறக்கட்டளை வாரியம் வழிநடத்தும் ஆஷ்ரம் இடைவழி இல்லத்திற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (நவம்பர் 19) வருகைபுரிந்தார்.
இந்து அறக்கட்டளை வாரியம் வழிநடத்தும் ஆஷ்ரம் இடைவழி இல்லத்திற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (நவம்பர் 19) வருகைபுரிந்தார்.
முன்னாள், இந்நாள் குற்றவாளிகளின் பிள்ளைகளுக்கு அவர் பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
'Back-to-School' என்னும் சிறப்புத் திட்டத்தின்கீழ் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அந்தத் திட்டம். அதில் 30 பேர் பயனடைந்தனர்.
இவ்வாண்டு அந்தத் திட்டத்தின்கீழ், 45 மாணவர்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அதிபர் ஹலிமா அந்த இடைவழி இல்லத்தின் பசுமைத் தோட்டத்தில் சிக்குப்பழச் செடியை நட்டுவைத்தார்.