சிங்கப்பூரில் பெண்ணைப் பலாத்காரம் செய்த பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு சிறை, பிரம்படி
சிங்கப்பூரில் பெண்ணைப் பலாத்காரம் செய்த பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு சிறை, பிரம்படி
23 வயது மலேசியப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது கோங் தாம் தானுக்கு ஆறாண்டுச் சிறைத்தண்டனையும், எட்டுப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஊ தாய் சோன் என்ற 24 வயது ஆடவருக்கு ஆறரை ஆண்டுச் சிறைத்தண்டனையும், எட்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
24 வயது மைக்கல் லீ, ஐந்தரை ஆண்டுக் காலத்தைச் சிறையில் கழிக்கவேண்டும்; 5 பிரம்படிகளைப் பெறவேண்டும்.
வியட்நாமிய வம்சாவளியைச் சேர்ந்த அந்த 3 ஆடவர்களும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வந்திருந்தனர்.
அதே நிகழ்ச்சிக்காக அங்கு வந்திருந்த 23 வயதுப் பெண், மதுபோதையில் இருந்தபோது, ஹோட்டல் அறை ஒன்றில் ஆடவர்கள் அவரை பலாத்காரம் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஆடவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.