Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2018இல் அமைச்சரவையில் அதிக மாற்றங்கள்: பிரதமர்

அடுத்த ஆண்டு அமைச்சரவையில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருக்கிறா

வாசிப்புநேரம் -
2018இல் அமைச்சரவையில் அதிக மாற்றங்கள்: பிரதமர்

(படம்: Monica Kotwani)

அடுத்த ஆண்டு அமைச்சரவையில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருக்கிறார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்காக, மணிலாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில், திரு லீ செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில் சில அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மூத்த துணையமைச்சர்களாக இருந்த திருமதி ஜோசஃபின் தியோவும், திரு டெஸ்மண்ட் லீயும் அமைச்சர்களாகப் பதவி உயர்வு பெற்றனர். மேலும் அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்கிறது என்றார் பிரதமர்.

அடுத்த ஆண்டு மேலும் அதிகமான புதிய அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் திரு லீ கோடிகாட்டினார்.

அமைச்சரவையில் மேலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்