ஈரறை வீட்டில் 94 பூனைகள்
ஃபெர்ன்வேல் லிங் வட்டாரத்தில் உள்ள ஈரறை வீடு ஒன்றில், சுமார் 94 பூனைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் விசாரித்து வருகிறது.
ஃபெர்ன்வேல் லிங் வட்டாரத்தில் உள்ள ஈரறை வீடு ஒன்றில், சுமார் 94 பூனைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் விசாரித்து வருகிறது.
அந்தப் பூனைகள் மோசமான சூழலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. கண் நோய்த்தொற்று, புண்கள் ஆகியவற்றால் பூனைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக பூனை நலன் சங்கம் தெரிவித்தது.
நேற்று சில தொண்டூழியர்களுடன் இணைந்து சங்கம் பூனைகளை மீட்டது.
பூனைகளுக்கான பராமரிப்பு இடத்துக்கு அவை கொண்டு செல்லப்பட்டன.