ஊழியர் மரணத்தின் தொடர்பில் கட்டுமான நிறுவனத்துக்கு $270,000 அபராதம்
க்ளமெண்டி வட்டாரத்தின் கட்டுமானத் தளம் ஒன்றில், ஊழியர் ஒருவர் மாண்டதன் தொடர்பில், TGG கட்டுமான நிறுவனத்துக்கு 270,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
க்ளமெண்டி வட்டாரத்தின் கட்டுமானத் தளம் ஒன்றில், ஊழியர் ஒருவர் மாண்டதன் தொடர்பில், TGG கட்டுமான நிறுவனத்துக்கு 270,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை அதனைக் குறிப்பிட்டது.
க்ளமெண்டி அவென்யூ 6, காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட ஆகியவற்றில், 38 மாடி குடியிருப்புக் கட்டடத்துக்கும், கார் நிறுத்துமிடத்துக்கும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
TGG அதன் முக்கிய துணைக் குத்தகையாளர்.
ஊழியர்கள் சிலர் 38 ஆவது தளத்தில், கட்டமைப்புகளை நீக்கிக் கொண்டிருந்தபோது, உலோகக் கட்டுமானக் கருவி, 31ஆவது தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் தலையில் விழுந்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
நிறுவனம், பயிற்சி பெறாத ஊழியர்களை அந்தப் பணியில் அமர்த்தியதாகவும், அவர்கள் மேற்பார்வை செய்யப்படவில்லை என்றும் மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.