Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கெப்பல் பாரந்தூக்கியின் மேல் மாண்டுகிடந்த ஆடவர்

காலை பத்து மணியளவில் 39 கேப்பல் ரோட்டில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

வாசிப்புநேரம் -
கெப்பல் பாரந்தூக்கியின் மேல் மாண்டுகிடந்த ஆடவர்

(படம்: சேனல் நியுஸ்ஏசியா)

 கேப்பல் நிறுவன முனையத்தில் இருந்த பாரந்தூக்கி ஒன்றில் ஆடவர் ஒருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டுள்ளார்.
பாரந்தூக்கியின் மேல் இருந்த சாதனம் ஒன்றில் அவர் உடல் சிக்கியிருந்ததாக சிங்கபூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காலை பத்து மணியளவில் 39 கேப்பல் ரோட்டில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்திலேயே ஆடவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர்த் துறைமுக ஆணையத்தின் அவசரச் சேவைக் குழு சடலத்தைக் கீழே கொண்டுவர உதவியதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மாண்ட ஆடவரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதாகவும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்