Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சைக்கிள் பகிர்வுத் திட்டம் -அங் மோ கியோவிலும்

சைக்கிள் நிறுவனங்களுடன் இணைந்து சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை அமுல்படுத்தும் மூன்றாவது வீடமைப்புப் பேட்டையாக அங் மோ கியோ அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சைக்கிள் நிறுவனங்களுடன் இணைந்து சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை அமுல்படுத்தும் மூன்றாவது வீடமைப்புப் பேட்டையாக அங் மோ கியோ அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, தெம்பனீஸ், ஜூரோங் வட்டாரங்களில், அந்தத் திட்டம் அறிமுகம் கண்டது.

அதுபற்றி பேசும்போது, அங் மோ கியோ வட்டாரத்தில் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதற்கான இடங்கள் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாய், அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அங் ஹின் கீ கூறினார்.

சந்தைகள், ரயில் நிலையங்கள், சமூக நிலையங்கள் ஆகிய இடங்களில், சைக்கிள்களுக்கு இடம் அளிக்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

அந்தப் புதிய வசதிகள், அடுத்த மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்று திரு அங் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்