திறந்த சில மணி நேரத்திலேயே டௌன்டவுன் ரயில்பாதையில் சேவைத் தடை
அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே டௌன்டவுன் ரயில்பாதையின் 3ஆம் கட்டப்பாதையில் சேவைத் தடை ஏற்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே டௌன்டவுன் ரயில்பாதையின் 3ஆம் கட்டப்பாதையில் சேவைத் தடை ஏற்பட்டுள்ளது.
ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் கூடுதலான நேரம் நிற்பதாகப் பிற்பகல் 2 மணியளவில் Twitterஇல் பதிவு செய்தார் ரயில் பயணி ஒருவர்.
டான் கா கீ, சிக்ஸ்த் அவென்யு, தம்பனீஸ், பிடோக் நார்த் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சேவைத் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
ரயில் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக ரயில் நிலைய அறிவிப்பு குறிப்பிட்டது.
சுமார் 10லிருந்து 15 நிமிடம் வரை ரயில்கள் நகராமல் நின்றதாக Facebookஇல் சில பயணிகள் குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் புக்கிட் பாஞ்சாங்-பியூட்டி வோர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் ரயில் கோளாறு காரணமாக அறிமுக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3ஆம் கட்டப்பாதையின் அதிகாரபூர்வத் திறப்பை முன்னிட்டு டௌன்டவுன் ரயில் பாதையில் இன்றும் நாளையும் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.