Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லஞ்சம் கொடுத்து படமெடுக்கவில்லை - இரவு நேரக் கார்ப்பந்தய தடத்தில் படமெடுத்த தம்பதி

தாம் அதிகாரியிடம் படம் எடுப்பதற்கு அனுமதி கேட்டதாகவும் அதற்கு அந்த அதிகாரி சம்மதித்துப் படம் எடுத்ததாகவும் விவ் ஸ்மித் எனும் நபர் ஃபோர்முலா-1 ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
லஞ்சம் கொடுத்து படமெடுக்கவில்லை - இரவு நேரக் கார்ப்பந்தய தடத்தில் படமெடுத்த தம்பதி

(படம் : சேனல் நியுஸ்ஏசியா)

சிங்கப்பூரின் இரவு நேரக் கார்ப்பந்தயத் தடத்தில் படம் எடுக்கப் பாதுகாப்பு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொன்ன ஆடவர் இப்போது அதனை மறுத்துள்ளார்.

தாம் அதிகாரியிடம் படம் எடுப்பதற்கு அனுமதி  கேட்டதாகவும் அதற்கு அந்த அதிகாரி சம்மதித்துப் படம் எடுத்ததாகவும்

விவ் ஸ்மித் எனும் நபர் ஃபோர்முலா-1 ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். 

தாம் தடத்தில் படம் எடுக்கும்போது வேறு சில பேரும் அங்கிருந்ததாக அவர் சொன்னார். 

தற்போது அவர் மலேசியாவில் பதுங்கியிருப்பதாகவும் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்