கரையோரப் பூந்தோட்டத்தில் மயக்கும் ஒளித்திருவிழா
ஒளித்திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது கரையோரப் பூந்தோட்டம். நாளை மறுநாள் (22 செப்டம்பர்) தொடங்கும் ஒளித்திருவிழாவை, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
(படங்கள்: Gaya Chandramohan)
ஒளித்திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது கரையோரப் பூந்தோட்டம். நாளை மறுநாள் (22 செப்டம்பர்) தொடங்கும் ஒளித்திருவிழாவை, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
பிரம்மாண்டமான விளக்குகள், இரவு நேரக் கலை நிகழ்ச்சிகள், உணவங்காடிகள், கைவினைக் காட்சியகங்கள் என்று கரையோரப் பூந்தோட்டம் களைகட்டவிருக்கிறது.
இதுவரை இல்லாத அளவு ஆகப் பெரிய விளக்கு அலங்காரப் படைப்பும் இந்த ஆண்டு காத்திருக்கிறது. சுமார் 1,250 சதுரமீட்டர் நீளம் கொண்ட "Waters of Prosperity" படைப்பு, வருவோரை மயக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
ஜொலிக்கும் விளக்குத் திருவிழாவைக் காண இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவேண்டுமா என்று மக்கள் இப்போதே முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர்.