அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் இன்று
சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் இன்று.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் இன்று.
அடுத்த அதிபராக, முன்னாள் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் நியமிக்கப்படலாம்.
அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்த மற்ற இரண்டு உத்தேச வேட்பாளர்கள் தகுதிநிலைகளை எட்டவில்லை.
திருவாட்டி ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்படலாம்.
47 ஆண்டுகளில் அவரே சிங்கப்பூரின் முதல் மலாய் சமூகத்தைச் சேர்ந்த அதிபராகவும் திகழலாம்.
இம்முறை அதிபர் தேர்தல் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கான விதிமுறைகள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் செயல்படுத்தப்பட்டன.