புதிய iPhone 8, 8 Plus கைபேசிக்காக இரவு முழுவதும் வரிசை பிடித்தோர்
புதிய iPhone 8, 8 Plus கைபேசிக்காக இரவு முழுவதும் வரிசை பிடித்தோர்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 8, iPhone 8 Plus கைபேசிகளை முதலில் கையில் வாங்கவேண்டும்; அதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து, பயன்படுத்திப் பார்க்கவேண்டும்.
அந்த ஆவலுடன் சுமார் 80 பேர் நேற்றிரவு ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஆப்பிள் கடைக்கு வெளியில் வரிசை பிடித்தனர். இரவு முழுவதும் காத்திருந்த அவர்களுக்கு, இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் விரும்பிய கைபேசி கையில் கிடைக்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் ஆப்பிள் கடை தொடங்கிய பிறகு, கைபேசி அறிமுக நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை.
நேற்றிரவு சுமார் 10 மணியளவில், கடை மூடும் சமயம், கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு தடுப்புகள் போடப்பட்டன.
வரிசை பிடித்தோருக்கு சில விதிமுறைகள் குறித்தும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் (காலை 8 மணிக்கு) புதிய கைபேசி விற்பனை தொடங்கிவிடும்.
சிங்கப்பூரில், iPhone 8 - 1,148 வெள்ளிக்கும், iPhone 8 Plus - 1,308 வெள்ளிக்கும் விற்கப்படவிருக்கிறது.