Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜாலான் புசார் ஹோட்டலில் விபச்சார சந்தேகம்- வெளிநாட்டவர் 24 பேர் கைது

ஜாலான் புசார் ஹோட்டலில் விபச்சார சந்தேகம்- 24 வெளிநாட்டினர் கைது 

வாசிப்புநேரம் -
ஜாலான் புசார் ஹோட்டலில் விபச்சார சந்தேகம்- வெளிநாட்டவர் 24 பேர் கைது

(படம்: SPF)

ஜாலான் புசார் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 24 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் பெண்கள், ஒருவர் ஆண்.

பாலியல் சேவைகள் அளிப்பதாக அவர்கள் பல்வேறு இணையத்தளங்களில் விளம்பரம் கொடுத்திருந்தனர். 

இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது, அதற்கான ஆதாரங்கள் சிக்கியதாகப் காவல்துறை அதிகாரிகள் கூறினர். 

கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிங்கப்பூருக்கு அனுமதி விசாவில் வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்