Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அடுத்த ஆண்டு குறைவான சேவை நேரம்

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையின் குறிப்பிட்ட பகுதிகளில், அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சேவை நேரம் குறைக்கப்படும். 

வாசிப்புநேரம் -
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அடுத்த ஆண்டு குறைவான சேவை நேரம்

படம்: Channel NewsAsia

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையின் குறிப்பிட்ட பகுதிகளில், அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சேவை நேரம் குறைக்கப்படும்.

மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அது வழிவகுக்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று(டிசம்பர் 15) தெரிவித்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25ஆம் தேதி வரை ஒரு தளமேடை மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.

காலை 5.30 மணிக்கு அந்தத் தளமேடையின் சேவை தொடங்கும். மற்றொரு தளமேடை காலை 7 மணியிலிருந்து இயங்கும்.

அந்தக் காலக்கட்டத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை SBS Transit அதிகரிக்கும்.

இருப்பினும், பயணிகள் கூடுதல் பயண நேரத்தை எதிர்நோக்கவேண்டி வரலாம் என ஆணையம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்