சீனப்பெண்ணை மானபங்கப்படுத்திய பங்களாதேஷ் ஊழியருக்கு 17 ஆண்டு சிறை
மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில் ஈராண்டுக்கு முன்னர், சீனப்பெண்ணை மானபங்கம் செய்த பங்களாதேஷ் ஊழியருக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில் ஈராண்டுக்கு முன்னர், சீனப்பெண்ணை மானபங்கம் செய்த பங்களாதேஷ் ஊழியருக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
24 வயது பங்களாதேஷ் ஊழியர், சீனாவைச் சேர்ந்த 40 வயது சீனப் பெண்ணைக் கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நேற்று மறுத்த ஆடவர், அந்தப் பெண்ணை அச்சுறுத்த மட்டுமே எண்ணியதாகச் சொன்னார். அந்தப் பெண்ணிடம் தாம் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
இன்று அவரின் குற்றச்சாடுகள் நிரூபிக்கப்பட்டன.
அவரின் தண்டனை காலம், 2015-ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி பத்தாம் தேதியிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்: