Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு பதின்மூன்றரை ஆண்டுச் சிறை,12 பிரம்படி

22 வயதுப் பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது ஆடவருக்குப் பதின்மூன்றரை ஆண்டுச் சிறையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு பதின்மூன்றரை ஆண்டுச் சிறை,12 பிரம்படி

படம்: Channel NewsAsia

22 வயதுப் பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது ஆடவருக்குப் பதின்மூன்றரை ஆண்டுச் சிறையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.

Zouk இரவு விடுதியிலிருந்து அந்தப் பெண்ணைத் தனது வீட்டுக்குக் கடத்திச் சென்றிருக்கிறார் ஆங் சூன் ஹெங்.

மதுபோதையில் உணர்விழந்த நிலையில் இருந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் ஹெங். தனக்கு என்ன நடந்ததென்று தெரியாமல் வீடு திரும்பிய பெண்ணுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.

சில நாட்கள் கழித்து, சம்பவத்தைப் பற்றி அறிந்து கொண்ட பெண்ணின் தந்தை, காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

ஜூலை மாதம் 2014இல் நடந்த சம்பவத்திற்காக இன்று ஹெங்குக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஹெங்கின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்திற்கு 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் கடத்தலுக்காக 7 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்