மார்சிலிங் லேனில் உள்ள புளோக் 17-இலின் கீழ்த்தளத்தில் நேற்று காலை ஆடவர் ஒருவர் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
அவர் 59 வயது கனரக வாகன ஓட்டுநர் அங் போ ஹூவா என்று அடையாளம் காணப்பட்டார். நேற்று அதிகாலை 2 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
புளோக் 16இல் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு அதிகாரிகளுக்கு மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 31 வயதுப் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர் வியட்நாமியர் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவரது அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.
மாண்ட இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் தகவல் இல்லை.
சம்பவம், இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.