சிங்கப்பூரில் அனைத்துலக இணையப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு
சிங்கப்பூர் நாணய வாரியம், இணையப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
சிங்கப்பூர் நாணய வாரியம், இணையப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
உலகம் முழுவதில் இருந்தும் அந்தத் துறையில் வல்லமை பெற்றவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் நிதித் துறையின் இணைய மீள்திறளை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து அந்தக் குழு ஆலோசனை வழங்கும் என்று வாரியம் கூறியது.
ஆலோசனைக் குழு 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
வளர்ச்சி-கண்டுவரும் தொழில்நுட்பங்கள், இணையத் தாக்குதல்கள் போன்றவை குறித்து, வாரியத்துக்கு அந்தக் குழு அனைத்துலக ரீதியான கண்ணோட்டத்தை வழங்கும்.
இணையப் பாதுகாப்பு தொடர்பான உத்திகளில் சிறந்த நடைமுறைகள் பற்றியும் அந்தக் குழு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குழுவின் உறுப்பினர்கள் ஈராண்டுத் தவணைக் காலத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த ஆலோசனைக் குழு அதன் முதல்- கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தும்.