Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காலாங்-பயா லேபார் விரைவுச் சாலையில் தீப்பிடித்த மஸராட்டி கார்

இன்று (நவம்பர் 20) மதியம் காலாங்-பயா லேபார் விரைவுச் சாலையில் மஸராட்டி கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டது.  

வாசிப்புநேரம் -
காலாங்-பயா லேபார் விரைவுச் சாலையில் தீப்பிடித்த மஸராட்டி கார்

படம்: Channel NewsAsia

இன்று (நவம்பர் 20) மதியம் காலாங்-பயா லேபார் விரைவுச் சாலையில் மஸராட்டி கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டது.  அதன் காரணமாகத் தீவு விரைவுச் சாலை வெளிவாயில் மூடப்பட்டது.

சம்பவம் குறித்து மதியம் 2 மணி அளவில் தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தது.

இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால், உடனடியாகச் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று வாகனமோட்டிகளுக்குச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆலோசனை கூறியுள்ளது.

மேலும், வாகன உரிமையாளர்கள் வாகனத்தைத் தவறாமல் பழுதுபார்க்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்