Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முத்தமிழைப் போற்றும் முத்தமிழ் விழா

முத்தமிழைப் போற்றும் முத்தமிழ் விழா

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழா தொடர்பில் பல்வேறு அமைப்புகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.   அவற்றுள் ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவும் ஒன்று.

சிறியவர் முதல் பெரியவர் கண்டுகளிக்கவல்ல பல்வேறு அங்கங்களுடன் நடைபெறும் முத்தமிழ் விழாவில், சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டி, மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி, சிறப்பு சொற்பொழிவு எனப் பல்வேறு அங்கங்கள் இடம்பெறுகின்றன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய், உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு 'தமிழவேள்' விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.   அந்த வகையில், உள்ளூர் எழுத்துத் துறைக்கு சிறப்பான வகையில் பங்காற்றிய இலக்கியவாதியும், ஒலி 96 புள்ளி 8 பிரிவின் முன்னாள் மூத்த செய்தியாளர் திரு செ ப பன்னீர்செல்வம் இவ்வாண்டு 'தமிழவேள்' விருதைப் பெற்றார்.


அதிலிருந்து சில காட்சிகள்..... 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்