தேசியப் பல்கலையில் இணைய ஊடுருவல்-தனிப்பட்ட சம்பவம்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் ஊழியர் ஒருவரின் இணையச் சேவையில் ஊடுருவல் சம்பவம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் ஊழியர் ஒருவரின் இணையச் சேவையில் ஊடுருவல் சம்பவம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடுருவல் சம்பவம் தனிப்பட்ட ஒன்று என்றும், உலகளவில் அண்மையில் நடந்த இணையத் தாக்கதல்களுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் அந்தப் பல்கலையின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
தகவல்களை ஊடுருவ முயன்ற இணையத் தளத்தைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பேச்சாளர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த ஊழியர் அவரது கடவுச் சொல்லையும், கணினிக் கணக்கின் தகவல்களையும் மாற்றியுள்ளார்.
மற்ற வகை இணையத் தாக்குதலோ, தகவல் இழப்போ ஏற்பட்டதற்கான அறிகுறி இல்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் கூறியது.