Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையம்வழி "பழமொழி பேசலாம்"

உறுமி தமிழ் மின்னிதழின் ஏற்பாட்டில் "பழமொழி பேசலாம்" என்ற நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

வாசிப்புநேரம் -

உறுமி தமிழ் மின்னிதழின் ஏற்பாட்டில் "பழமொழி பேசலாம்" என்ற நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. 

இணையம்வழி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்கள் போட்டி குறித்த தங்கள் எண்ணங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 15 பழமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து, 27ஆம் தேதிக்குள் அது தொடர்பான காணொளியை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதில் 30 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் காணொளிகளைப் பதிவேற்றம் செய்தனர். அவற்றிலிருந்து சிறந்த காணொளி, சிறந்த பேச்சாளர் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாகப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பரிசளிப்பு நிகழ்ச்சி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.

அதிலிருந்து சில காட்சிகள்..... 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்