கர்ப்பிணியின் பணப்பையைப் பறிக்க முயன்ற ஆடவர் கைது
கர்ப்பிணி ஒருவரின் பணப்பையைப் பறிக்க முயன்ற ஆடவர் கைது
பிடோக் சௌத் அவென்யூ 2 புளோக் 35இல் கர்ப்பிணி ஒருவரின் பணப்பையைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு சுமார் 9 மணிவாக்கில் சம்பவம் குறித்து அந்தப் பெண் புகார் அளித்ததாகக் கூறப்பட்டது.
தம்முடன் மின்தூக்கியில் வந்த அந்த 31 வயது ஆடவர் தமது பணப்பையை வல்லந்தமாகப் பறிக்க முயன்றதாக அந்தப் பெண் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தாம் உதவி கேட்டுக் கூச்சலிட்டதாக அவர் சொன்னார்.
மின் தூக்கிக்குள் இருக்கும் காமிராவில் பதிவானதைப் பார்த்து, சந்தேக நபரைக் கைது செய்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.
தம்பினீஸ் ரயில் நிலையத்துக்கு அருகே இன்று அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.