Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோவில் வாணவேடிக்கையை வெடித்த ஆடவர் கைது

ஆடவர் ஒருவர் வாணவேடிக்கை வெடித்ததின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அங் மோ கியோ அவென்யூ 1 பிளோக் 307A-யில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கட்டடத்தின்  மேல்தளத்திலுள்ள பூங்காவில் வாணவேடிக்கையை வெடித்தார். காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
அங் மோ கியோவில் வாணவேடிக்கையை வெடித்த ஆடவர் கைது

படம்: Reuters

ஆடவர் ஒருவர் வாணவேடிக்கை வெடித்ததின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அங் மோ கியோ அவென்யூ 1 பிளோக் 307A-யில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கட்டடத்தின்  மேல்தளத்திலுள்ள பூங்காவில் வாணவேடிக்கையை வெடித்தார். காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பலத்த சத்தம் குறித்து புதன்கிழமையன்று காவல்துறையினருக்கு இரவு 10.30 மணி அளவில் தகவல் அளிக்கப்பட்டது. அது வாணவேடிக்கையின் சத்தம் என நம்பப்படுகின்றது.

37 வயது சந்தேக நபரைக் காவல்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 1.30 மணி அளவில் கைது செய்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு $2,000 முதல் $10,000 வரையிலான அபராதமும் 2 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்