கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் அடுத்த மாதத்தின் எல்லா வார இறுதி நாட்களிலும் ரயில் சேவை பாதிப்பு
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் அடுத்த மாதத்தின் எல்லா வார இறுதி நாட்களிலும் ரயில் சேவை பாதிக்கப்படும் என்று SMRT நிறுவனம் தெரிவித்தது.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் அடுத்த மாதத்தின் எல்லா வார இறுதி நாட்களிலும் ரயில் சேவை பாதிக்கப்படும் என்று SMRT நிறுவனம் தெரிவித்தது.
ரயில் பாதையில் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது அதற்குக் காரணம்.
10 நிலையங்கள், அடுத்த மாதத்தின் மூன்றாவது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும்.
பயா லேபார் முதல் பாசிர் ரிஸ் வரையிலான நிலையங்கள் பாதிக்கப்படும். அந்த நிலையங்களோடு எக்ஸ்போ, சாங்கி விமான நிலைய ரயில் நிலையங்களும் பாதிக்கப்படும்.
சேவைத் தடையால் பாதிக்கப்படும் நிலையங்களுக்கு இடையே இரண்டு பேருந்துகள் பயணிகளுக்குச் சேவை வழங்கும்.