Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்வத்துடன் அனைவரும் முயன்று பார்த்த செய்தியின் "தமிழோடு விளையாடு"

ஆர்வத்துடன் அனைவரும் முயன்று பார்த்த செய்தியின் "தமிழோடு விளையாடு"

வாசிப்புநேரம் -

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு அரங்கத்தில் தாய்மொழிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் கூடத்தில் செய்தியின் "தமிழோடு விளையாடு" செயலியை விளையாடிப் பார்க்க வருகையாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லோரையும் ஈர்த்தது "தமிழோடு விளையாடு" செயலி. ஐந்து நிமிட விளையாட்டை முயன்று பார்த்து தாங்கள் பெற்ற புள்ளிகளை ஆர்வமாகக் குறித்துக்கொண்டனர் மாணவர்கள்.

பாலர் பள்ளி மாணவர்கள் சிலர், எழுத்துக்களைத் தேடித்தேடித் தட்டச்சு செய்து, பெற்றோர் உதவியுடன் விளையாடிப் பார்த்தனர்.

மின்னியல் சாதனங்களை இதுபோன்ற பயனுள்ள வகையில் பிள்ளைகள் பயன்படுத்துவது ஆரோக்கியமான போக்கு என்றனர் பெற்றோர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்