2 கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் பெண் ஒருவருக்குக் காயம்
ரிவர் வேலி ரோடு சந்திப்பு ஒன்றில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 39 வயதுப் பெண் காயமடைந்தார்.
ரிவர் வேலி ரோடு சந்திப்பு ஒன்றில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 39 வயதுப் பெண் காயமடைந்தார்.
அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் செலுத்திய கார் மற்றொரு காருடன் புதன்கிழமை (டிசம்பர் 13) இரவு மோதியது.
ஸியோன் ரோடு அருகில் அச்சம்பவம் நடந்தது. சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்கு இரவு 10.35 மணி அளவில் தகவல் கிடைத்தது.
பெண்ணுடன் அதே காரில் இருந்த மற்றொருவருக்கும் இன்னொரு காரில் பயணம் செய்த இருவருக்கும் காயமில்லை.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.