திரு லீ நினைத்ததைப் போலவே சிங்கப்பூரை வழிநடத்த வேண்டும்: திரு கோ சோக் தோங்
மறைந்த திரு லீ குவான் இயூவுக்குப் பொதுமக்கள் வெளிப்படுத்திவரும் அளவிடமுடியாத ஆதரவும் அன்பும் தம்மை நெகிழச் செய்திருப்பதாக ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங் (Goh Chok Tong) கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவுக்குப் பொதுமக்கள் வெளிப்படுத்திவரும் அளவிடமுடியாத ஆதரவும் அன்பும் தம்மை நெகிழச் செய்திருப்பதாக ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங் (Goh Chok Tong) கூறியுள்ளார்.
மரீன் பரேட் (Marine Parade) குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கோ, கம்பாங்காங் (Kembangan) சமூக மன்றத்தின் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரை நினைவில் வைத்துக் கொள்வதற்கு முக்கியமான வழிகளில் ஒன்றாகத் திரு லீ நினைத்ததைப் போலவே சிங்கப்பூரை வழிநடத்த வேண்டும் என்றார் திரு கோ. திரு. லீ, தமக்குப் பிறகும் சிங்கப்பூர் வளம்பெறும் நாடாக விளங்குவதையே விரும்பியிருப்பார் என்று திரு கோ சொன்னார். அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குத் தற்போதைய தலைமுறையினரும் எதிர்காலச் சந்ததியினருமே பதில் சொல்ல வேண்டும் என்றும் திரு கோ கூறினார்.