Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீயின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு விவரங்கள்

மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கின்போது பணியில் ஈடுபடும் ஆயுதப் படை அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
திரு லீயின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு விவரங்கள்

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கின்போது பணியில் ஈடுபடும் ஆயுதப் படை அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரித்திருக்கும் தேவைகளே அதற்குக் காரணம். சுமார் ஈராயிரத்து-800 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர் என்று மதிப்பிடப்படுகிறது. மக்களின் நெரிசல்மிகுந்த வரிசைகளைச் சமாளிக்க, கிட்டத்தட்ட முந்நூறு கூடாரங்களும், சுமார் ஆயிரம் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருப்பதாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. திரு லீக்கு மரியாதை செலுத்துவதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டதில் இருந்து, விழிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை முப்பதில் இருந்து சுமார் அறுபதுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்