இறுதி ஊர்வலத்தின்போது தேசியக் கொடியைப் பறக்கவிடலாம்: அமைச்சர் லாரண்ஸ்
திரு லீ குவான் இயூவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் தேசியக் கொடிகளைப் பறக்கவிட விரும்புவோர், அவரது இறுதி ஊர்வலத்தின்போது அதைச் செய்யலாம் என்று கலாச்சார, சமூக, இளையர் துறைகளுக்கான அமைச்சர் லாரண்ஸ் வாங்(Lawrence Wong) தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர்: திரு லீ குவான் இயூவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் தேசியக் கொடிகளைப் பறக்கவிட விரும்புவோர், அவரது இறுதி ஊர்வலத்தின்போது அதைச் செய்யலாம் என்று கலாச்சார, சமூக, இளையர் துறைகளுக்கான அமைச்சர் லாரண்ஸ் வாங்(Lawrence Wong) தெரிவித்திருக்கிறார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் அது குறித்து எழுதிய அவர், அதுபோன்ற முனைப்பான செயல்களை வரவேற்பதாகச் சொன்னார்.
ஆனால் அரசாங்க மரியாதையுடன் நடத்தப்படும் இறுதி ஊர்வல நாளன்று, கொடிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் தொங்கவிடுவது, பொருத்தமாக இருக்காது என்றார் அவர்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அடித்தளத் தலைவர்கள் முன்மொழிந்த யோசனை குறித்துத் திரு வாங் கருத்துரைத்தார்.