திரு லீயின் மறைவு: பிரிட்டனின் இரண்டாம் எலிசபத் அரசியார் ஆழ்ந்த அனுதாபம்
பிரட்டனின் இரண்டாம் எலிசபத் அரசியார், திரு லீ குவான் இயூவின் மறைவு குறித்து தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர்: பிரிட்டனின் இரண்டாம் எலிசபத் அரசியார், திரு லீ குவான் இயூவின் மறைவு குறித்து தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். அதிபர் டோனி டானுக்கும், பிரதமர் லீ சியன் லூங்குக்கும் அவர் அனுதாபச் செய்திகளை அனுப்பினார். திரு லீயின் மறைவு குறித்து இளவரசர் பிலிஃப்பும், தாமும் வருந்துவதாக அவர் சொன்னார். சிங்கப்பூரை இன்றைய நிலைக்கு உயர்த்த, திரு லீ நாட்டின் முதல் பிரதமராக இருந்து புரிந்த சாதனைகள் மிக முக்கியமானவை என்றார் அரசியார். திரு லீயின் நீண்டகாலத் தலைசிறந்த சேவைகள் பிரம்மிக்க வைப்பதாக அவர் சொன்னார். உலகில் திரு லீக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்; தம் நாடு அவற்றில் ஒன்று என்பதையும் அவர் குறிப்பிட்டார்.