வரவுசெலவுத் திட்டம் 2016 : இந்திய அடித்தளத் தலைவர்கள் கலந்துரையாடல்
வரவுசெலவுத் திட்டம் 2016 குறித்த கலந்துரையாடல் ஒன்றில், இந்திய அடித்தளத் தலைவர்களும் பங்காளிகளும் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் கழகத்தின் நற்பணி பேரவையும், தமிழர் பேரவையும் இணைந்து அந்த வருடாந்திர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சிங்கப்பூர்: வரவுசெலவுத் திட்டம் 2016 குறித்த கலந்துரையாடல் ஒன்றில், இந்திய அடித்தளத் தலைவர்களும் பங்காளிகளும் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் கழகத்தின் நற்பணி பேரவையும், தமிழர் பேரவையும் இணைந்து அந்த வருடாந்திர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்பு, தகவல் மற்றும் கல்வி அமைச்சுகளுக்குத் துணை அமைச்சரும், நற்பணி பேரவைக்கு ஆலோசகருமான Dr Janil Puthucheary கலந்துரையாடலை வழிநடத்தினார்.
பல்வேறு இந்திய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், பஞ்சாப் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்தோர் அதில் அடங்குவர்.