வெளிநாட்டு வாக்குகள் இன்று எண்ணப்பட்டன
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான வெளிநாட்டு வாக்குகள் இன்று எண்ணப்பட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான வெளிநாட்டு வாக்குகள் இன்று எண்ணப்பட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாக்களிக்க, 52 பேர் தகுதிபெற்றனர்.
அவர்களில் 32 பேர், வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கைப் பதிவு செய்ததாகத் தேர்தல் துறை சொன்னது.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மக்கள் செயல் கட்சியின் திரு முரளி பிள்ளை 61 விழுக்காடு, அதாவது கிட்டத்தட்ட 14-ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், 39 விழுக்காடு அதாவது, ஒன்பதாயிரத்து 150 வாக்குகளைப் பெற்றதாகத் தேர்தல் துறை கூறியது.