Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குடியிருப்பாளர்கள் தேவைகளைக் கவனிப்பதற்கான திட்டங்களை வகுக்க முரளி உறுதி

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை, கடந்த 9 நாட்களாகப் பிரசாரம் செய்தது களிப்பூட்டிய அனுபவம் எனக் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை, கடந்த 9 நாட்களாகப் பிரசாரம் செய்தது களிப்பூட்டிய அனுபவம் எனக் கூறியிருக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகுதிக்காகத் தாம் செயல்படுத்தப் போகும் திட்டங்களைப் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அறிந்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

புக்கிட் பாத்தோக்கில் சுகாதாரக் கவனிப்புக் கூட்டுறவை அமைப்பது, வேலை தேடுவோருக்கு உதவி செய்வது உள்ளிட்டவை திட்டங்களில் அடங்கும்.

1972 முதல் புக்கிட் பாத்தோக்கை கவனித்து வரும் மக்கள் செயல் கட்சிக்கு வாக்களிக்குமாறு திரு. முரளி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

குடியிருப்பாளர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் உரிய நேரத்தில் கவனிப்பதற்கான வலுவான திட்டங்களை வகுக்க அவர் உறுதியளித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்