Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தஞ்சோங் பகார், பிஷான் தோபாயோ - ம.செ.க தொகுதிச் சுற்றுலா

கடந்த 9 நாட்களாகப் பிரசாரக் கூட்டங்கள், தொகுதிச் சுற்றுலாக்கள் ஆகியவற்றில் ஈடுபட்டது களைப்பை ஏற்படுத்தினாலும் அவை மிகுந்த மனநிறைவை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. சான் சுங் சிங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: கடந்த 9 நாட்களாகப் பிரசாரக் கூட்டங்கள், தொகுதிச் சுற்றுலாக்கள் ஆகியவற்றில் ஈடுபட்டது களைப்பை ஏற்படுத்தினாலும் அவை மிகுந்த மனநிறைவை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. சான் சுங் சிங் கூறியிருக்கிறார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் போட்டியிடும் அவர் தேக்கா சந்தையில் இன்று தொகுதிச் சுற்றுலா மேற்கொண்டபோது அவ்வாறு சொன்னார். அத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணிக்குத் திரு. சான் சுன் சிங் தலைமை தாங்குகிறார். 

குமாரி இந்திராணி ராஜா, திருவாட்டி ஜோன் பெரேரா, டாக்டர் சியா ஷி லூ, திரு. மெல்வின் யோங் ஆகியோர் தஞ்சோங் பகாரில் போட்டியிடும் இதர வேட்பாளர்கள்.

பிரசார ஓய்வு நாளான நாளை தமது குடும்பத்துடன் நேரம் செலவிடப்போவதகத் திருவாட்டி பெரேரா கூறினார். கடந்த 9 நாட்களாகக் காலை 7 மணியிலிருந்தே தாங்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி போட்டியிடுகிறது.

பிஷான் தோபாயோ குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணியும் இன்று தொகுதிச் சுற்றுலா மேற்கொண்டது. 

டாக்டர் இங் எங் ஹென் தலைமையிலான அணியினர் தோபாயோ செண்ட்ரலில் மக்களைச் சந்தித்தனர். பெருவிரைவு ரயில் நிலையம், உணவங்காடிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அவர்கள் சென்றனர்.

பிஷான் தோபாயோவில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் மக்கள் கட்சி களம் இறங்குகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்