"சிங்கப்பூரர்கள் நிலையான முன்னேற்றத்தையே விரும்புகின்றனர்"
சிங்கப்பூரர்கள் நிலையான முன்னேற்றத்தையே விரும்புகின்றனர்; மக்கள் மனஉறுதியுடன் வாழ்க்கையில் மேம்பாடு காண விரும்புகின்றனர்; அவசரமாகத் தட்டுத் தடுமாறி முன்னேறிச் செல்ல விரும்பவில்லை.
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் நிலையான முன்னேற்றத்தையே விரும்புகின்றனர்; மக்கள் மனஉறுதியுடன் வாழ்க்கையில் மேம்பாடு காண விரும்புகின்றனர்; அவசரமாகத் தட்டுத் தடுமாறி முன்னேறிச் செல்ல விரும்பவில்லை.
துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்தினம் அவ்வாறு கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் ஊக்குவிப்பதாய் இருப்பதாகச் சொன்ன அவர், அது சிங்கப்பூரர்களின் விவேகத்துக்கு அடையாளமாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
திரு தர்மனின் தலைமையில் களமிறங்கிய மக்கள் செயல் கட்சிக் குழு, 79 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றது.
மக்கள் செயல் கட்சியிடம், நாட்டின் தலைமைத்துவத்தையும், முன்னோக்கிய பாதையையும், மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகச் சொன்னார் திரு தர்மன்.