வெற்றி விழா: 2ம் நாள்
மரீன் பரேட் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற ம.செ.க அணியினர் இன்று நன்றி கூறும் ஊர்வலத்தை மேற்கொண்டனர். அமைச்சர் திரு டான் சுவான் ஜின்னும், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங்கும் அதில் கலந்துகொண்டனர்.
மாலை 4:25: பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியின் திரு சார்ல்ஸ் சோங் வட்டாரவாசிகளைச் சந்தித்தார்.
மதியம் 2: அல்ஜூனிட் குழுத்தொகுதியில் வெற்றிபெற்ற பாட்டாளிக் கட்சியினர் வெற்றி ஊர்வலம் மேற்கொண்ட லாரியைத் துரத்திச் சென்ற 2 இளையர்கள், தாங்கள் செய்த பதாகையை அவர்களிடம் வழங்கினர்.
(படம்: Amanda Lee/TODAY)
காலை 11:15: சிங்கப்பூர் மக்கள் கட்சி அதன் நன்றி தெரிவிக்கும் ஊர்வலத்தை இன்று பொத்தோங் பாசிரில் தொடங்கியது. திரு சியாம் சீ தோங்கிற்கு மக்கள் வழங்கிய ஆதரவுக்குக் கட்சியின் தலைவர் லினா சியாம் நன்றி தெரிவித்துக் கொண்டார். திருவாட்டி லினா, கட்சியின் ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
காலை 10:30: உபி அவென்யூ ஒன்றுக்குச் சென்ற ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங், அங்கு வசிப்பவர்களிடம் பேசினார்.
காலை 10: யூஹுவா தனித்தொகுதியில் தன் இடத்தை தற்காத்துக்கொண்ட அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ, இன்று காலை, உணவங்காடியில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறினார்.
காலை 9:45: அல்ஜூனிட்டில் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி அணியினரும் ஊர்வலத்திற்குத் தயாராகினர். திரு இயோ குவாட் குவாங் தலைமையில் களமறிங்கிய ம.செ.க அணியிடமிருந்து அல்ஜூனிட்டைத் தற்காத்துக்கொண்டது பாட்டாளிக் கட்சி.
காலை 9: மரீன் பரேட் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற ம.செ.க அணியினர் இன்று நன்றி கூறும் ஊர்வலத்தை மேற்கொண்டனர். அமைச்சர் திரு டான் சுவான் ஜின்னும், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங்கும் அதில் கலந்துகொண்டனர்.
சிராங்கூன் அவென்யூ மூன்றிலுள்ள ஈரச் சந்தைக்கு அவர்கள் சென்றனர். தங்களுக்கு ஆதரவு அளித்த வட்டாரவாசிகளுக்கு நன்றி தெரிவித்தனர். திரு யீ ஜென் ஜொங் வழிநடத்திய பாட்டாளிக் கட்சி அணிக்கு எதிராக, ம.செ.க. 64.07 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.