கருக்கலைப்புக்குப் பதில் தத்தெடுக்கும் கலாசாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும்
சிங்கப்பூரில் கருக்கலைப்புக்குப் பதில் தத்தெடுக்கும் கலாசாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Christopher de Souza கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் கருக்கலைப்புக்குப் பதில் தத்தெடுக்கும் கலாசாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Christopher de Souza கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் மூலம் சிங்கப்பூரின் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் பேசிய திரு De Souza, சிங்கப்பூரின் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதைச் சுட்டினார்.
வரும் ஆண்டுகளில் அது பொருளியலை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால் தத்தெடுப்பை ஊக்குவிப்பதன் மூலம், அந்த விகிதத்தை அதிகரிக்கலாம் என்றார் திரு. De Souza.