Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போட்டிகளின் 9ம் நாள்

விளையாட்டுகளின் ஒன்பதாவது நாளான இன்று சிங்கப்பூர் படகுவிடும்போட்டியில் ஒரு தங்கம் வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -

விளையாட்டுகளின் ஒன்பதாவது நாளான இன்று சிங்கப்பூர் படகுவிடும்போட்டியில் ஒரு தங்கம் வென்றுள்ளது. பெண்கள் Skiff-49er-FX பிரிவில் கிரிசெல்டா காங்(Griselda Khng), சாரா டான்(Sara Tan) இணை, மலேசிய இணையை வென்று தங்கம் பெற்றனர். மேலும் இன்று காலை நடைபெற்ற போட்டிகளில் சிங்கப்பூருக்கு  ஒரு வெள்ளியும் இரண்டு வெண்கலப்பதக்கங்களும் கிடைத்தன. பெண்கள் lightweight ஓற்றையர் ஆயிரம் மீட்டர் படகுப்போட்டியில் குடியரசின் சயிடா அய்ஷியா(Saiyidah Aisyah) வெண்கலப்பதக்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் ஆயிரம் மீட்டர் படகுப்போட்டியில் ஜோன் போ(Joan Poh), ஜோனா செங்(Joanna Cheng) இணையினர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

நான்கு பேர்கொண்ட ஆண்கள் குழுப் படகுப்போட்டியில்  சிங்கப்பூருக்கு வெள்ளிப்பதக்கம்கிடைத்தது. தற்போது சிங்கப்பூர் 75 தங்கம், 66வெள்ளி, 96 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து தாய்லந்து முதல் இடத்தில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்