தெ.கி.விளையாட்டுகள்: இந்தியர்களின் பங்கு
நிறைவு விழாக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது ஹனுருதீன் ஹமீதின் அனுபவங்களைப் பற்றியும் அறிந்து வந்தார், எமது நிருபர் சன்ஜே.
சிங்கப்பூர்: நிறைவு விழாக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது ஹனுருதீன் ஹமீதின் அனுபவங்களைப் பற்றியும் அறிந்து வந்தார், எமது நிருபர் சன்ஜே.
28ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பு சற்று அதிகமாகவே காணப்பட்டது.
ஓட்டப்பந்தயம், தரைப்பந்து, சுவர்ப்பந்து எனப் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றிபெற்று தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர் அவர்கள்.
சிங்கப்பூரர்கள் தந்த பேராதரவும் தங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பது விளையாட்டாளர்களின் எண்ணம்.
கடந்த சுமார் இரு வாரங்களாக நடைபெற்ற போட்டிகள் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
சிங்கப்பூர் வெற்றிகரமாகப் போட்டிகளை ஏற்று நடத்தியதை எண்ணி மகிழ்ச்சி கலந்த மனநிறைவு.
கடினமான பயிற்சி, விடாமுயற்சி, தியாகம். இவற்றுக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் சிங்கப்பூர் விளையாட்டாளர்களின் வெற்றிகளுக்கு மகுடம் சூட்டுவதுபோல் நிறைவுவிழாக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.