நுழைவுச் சீட்டுகளை வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச் சீட்டுகளுக்காக அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கெடுத்து வெற்றிபெற்றோர், நாளை மறுநாள் முதல் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூர்: இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச் சீட்டுகளுக்காக அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கெடுத்து வெற்றிபெற்றோர், நாளை மறுநாள் முதல் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களின் வழி வெற்றிபெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
Marina Square கடைத்தொகுதியின் முகப்புக் கூடத்தில், காலை பத்து மணியிலிருந்து, இரவு பத்து மணி வரை நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய இறுதி நாள், இம்மாதம் 14-ஆம் தேதி.