தமிழர் திருநாள் விழாவின் 35ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
சிங்கப்பூரர்கள் அவரவர் பாரம்பரிய அடையாளத்தைப் பேணிக் காக்க வேண்டும். நம்முடைய வேர் எங்கிருக்கிறது என்ற உணர்வுடன் அவரவருக்கு விருப்பமான சமயத்தையும் சடங்குகளையும் பின்பற்றலாம். அதன் காரணமாகவே சிங்கப்பூரில், ஆங்கிலத்துடன் தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்படுகிறது.
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அவரவர் பாரம்பரிய அடையாளத்தைப் பேணிக் காக்க வேண்டும். நம்முடைய வேர் எங்கிருக்கிறது என்ற உணர்வுடன் அவரவருக்கு விருப்பமான சமயத்தையும் சடங்குகளையும் பின்பற்றலாம். அதன் காரணமாகவே சிங்கப்பூரில், ஆங்கிலத்துடன் தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்படுகிறது. அதற்கான அடித்தளத்தை அமைத்த பெருமை மறைந்த திரு லீ குவான் இயூவைச் சேரும் என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ. நேற்று நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.