சித்திரைக் கலை இரவு நிகழ்ச்சி(வீடியோ)
சிங்கப்பூரில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தமிழில் பேசக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது முக்கியம்.
சிங்கப்பூரில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தமிழில் பேசக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது முக்கியம்.
இவ்வாண்டின் சித்திரைக் கலை இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவ்வாறு கூறினார்.
லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், வளர்தமிழ் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சித்திரைக் கலை இரவு, பத்தாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது.
அதற்கு வருகையளித்துச் சிறப்பித்தார், திரு. விக்ரம் நாயர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, ஆடல் பாடல் அங்கங்களுடன் களைகட்டியது.
இவ்வாண்டின் நிகழ்ச்சியில் தமிழின் சுவையைப் பிரதிபலிக்கும் பிரபலத் திரைப்பாடல்களைப் பாடினர், உள்ளூர்ப் பாடகர்கள்.